பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்ட விருதுகள் 2021
November 3 , 2022 627 days 341 0
செயல்படுத்தல் மற்றும் புத்தாக்கத்திற்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்ட விருதுகள் ஆனது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத் திட்டமானது, இந்தியாவின் நகர்ப் புறங்களில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டிற்குள் 1.12 கோடி வீடுகளை உருவாக்குவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்காக மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு விருதுகள் ஆனது இந்த விருதுகளின் 2வது பதிப்பாகும்.
மாநிலங்கள் பிரிவில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை முன்னணி இடம் வகிக்கின்றன.
2019 ஆம் ஆண்டிற்கான விருதுகளைப் பெறும் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியனவாகும்.
வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்கள் பிரிவில், திரிபுரா முதலிடத்தில் உள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான விருதையும் இம்மாநில அரசு வென்றுள்ளது.