TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி நுண் உணவுப் பதப்படுத்தலின் ஒழுங்குமுறை

July 3 , 2020 1480 days 591 0
  • மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை (FPI - Food Processing Industries) அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்படும் பிரதான் மந்திரி நுண் உணவுப் பதப்படுத்தல் ஒழுங்குமுறைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது 2024-25 வரை 5 ஆண்டுக் காலத்திற்கு செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • இது அகில இந்திய அளவில் அமைப்புசாரா துறைக்கான ஒரு திட்டமாகும்.
  • இதற்கான செலவினமானது இந்திய அரசு மற்றும் மாநிலங்களிடையே முறையே 60 : 40 என்ற அளவில் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது.
  • இந்த திட்டத்திற்காக “ஒரு மாவட்டம் ஒரு பொருள்” என்ற அணுகுமுறையானது ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றது.
  • இந்த அணுகுமுறையின் கீழ், மாநிலங்கள் தற்பொழுது இருக்கும் மூலப் பொருட்களின் அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கான உணவுப் பொருளை (சிறப்புமிக்க () விரைவில் அழியக் கூடிய () தானியம்) அடையாளம் காண இருக்கின்றன.
  • பசுமை நடவடிக்கைத் திட்டமானது மாம்பழம், வாழைப்பழம், கொய்யப்பழம், கிவி, லிச்சி, பப்பாளி, நாரத்தை, அன்னாட்சி, மாதுளை, பலா ஆகிய 10 பழ வகைகளுக்கும் பிரெஞ்சு பீன்ஸ், பாகற்காய், கத்தரி, மிளகுச்செடி, கேரட், காளிபிளவர், பச்சை மிளகாய், ஒக்ரா ஆகிய 8 காய்கறி வகைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்