பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஷ்கர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் காணொலி வாயிலாக உரையாடினார்.
அவர் பிளாக்செயின் (தொடர் சங்கிலி) என்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னிலக்க முறையில் சான்றிதழ்களை வெற்றியாளர்களுக்கு வழங்கினார்.
விருது பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவதற்காக வேண்டி முதல் முறையாக இந்தத் தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டது.
14 சிறுமிகள் உட்பட 29 குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
புத்தாக்கம், விளையாட்டு, கல்வியியல் சாதனைகள், சமூக சேவை, கலை & கலாச்சாரம் மற்றும் துணிச்சல் (வீரம்) ஆகிய 6 துறைகளில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விசாலினி N.C. மற்றும் அஷ்வதா பிஜூ ஆகியோர் புத்தாக்கத் துறையில் விருதுகளைப் பெற்றனர்.