169 நகரங்களில் மின்சாரப் பேருந்துச் சேவையின் பயன்பாட்டினை அதிகரிக்கும் ஒரு நோக்கிலான 57,613 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதான் மாதிரி மின்சாரப் பேருந்துச் சேவை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 10,000 புதிய மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக 57,613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நகரப் பேருந்து இயக்கத்திற்கும், குறிப்பாக முறையான பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 3,00,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
பொது-தனியார் துறைப் பங்கேற்பு முறையின் மூலம் (PPP) 10 ஆண்டுகளுக்கு மின்சாரப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படும்.