TNPSC Thervupettagam

பிரத்யேக விசாரணை பிரிவு

March 29 , 2019 1940 days 597 0
  • தமிழ்நாடு காவல்துறையானது விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து 1500 காவல் நிலையங்களிலும் பிரத்யேக விசாரணைப் பிரிவினை தொடங்க உள்ளது.
  • சிறப்பாக உருவாக்கப்படும் இந்த விசாரணைப் பிரிவானது ஏற்கனவே உள்ள குற்றவியல் பிரிவிற்கு பதிலாக மாற்றப்படும்.
  • 2013 ஆம் ஆண்டின் தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்த சட்டத்தின்படி, இந்த விசாரணைப் பிரிவானது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவினால் அடையாளம் காணப்பட்ட வழக்குகள் உட்பட பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் விசாரணை நடத்துதல் மற்றும் வழக்கு பதிவு செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.
  • ஆணையர் அல்லது மண்டல ஐஜி ஆகியோர் அனுமதியின்றி இந்த விசாரணைப் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்