70வது பிரபஞ்ச அழகிப் போட்டியானது (2021) இஸ்ரேல் நாட்டின் எய்லாட் எனுமிடத்தில் நடத்தப் பட்டது.
2021 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை ஹர்னாஸ் சந்து வென்று அதன் மூலம் ஒரு வரலாறு படைத்ததன் மூலம் இந்தப் பட்டத்தை இந்தியா 21 ஆண்டுகள் கழித்து நம் நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
21 வயதான செல்வி சந்து பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.
இதில் பராகுவே நாட்டின் நாடியா பெரெய்ரா 2வது இடத்தைப் பெற்றார்.
இதில் தென் ஆப்பிரிக்க நாட்டின் லாலெலா மிஸ்வேன் 3வது இடத்தைப் பெற்றார்.
சந்துவிற்கு முன்பாக 2 இந்தியர்கள் மட்டுமே பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்று உள்ளனர்.
அந்த இருவர், 1994 ஆம் ஆண்டில் சுஷ்மிதா சென் மற்றும் 2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா ஆகியோர் ஆவர்.