இந்திய அறிவியலாளர்கள், மணிக்கு 12,144 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒரு நவீன கால 'பிரம்மாஸ்திரா' எறிகணையினை உருவாக்கியுள்ளனர்.
மிக நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய கப்பல் எதிர்ப்பு எறிகணை (LRAShM) என்று பெயரிடப் பட்ட இந்த ஆயுதம் ஆனது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு அதி மீயொலி இழைவியக்க எறிகணை ஆகும்.
10 மாக் வேகத்தில் இயங்குகின்ற இந்த எறிகணை ஆனது ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாக இயங்குகிறது.
1,000 கிலோ மீட்டர் தாக்குதல் வரம்பைக் கொண்ட சீனாவின் DF-17 போலல்லாமல், இந்தியாவின் LRAShM 1,500 கிலோ மீட்டர் வரையிலான தாக்குதல் வரம்பைக் கொண்டு உள்ளது.