- RUJ குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான Dr. ராஜேந்திர குமார் ஜோஷி பிரவாசி பாரதிய சம்மான் விருதினைப் பெற்றுள்ளார்.
- இந்த விருதானது அறிவியல், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் அவரின் பங்களிப்பிற்காகவும் இந்தியாவின் பெருமையையும் கௌரவத்தையும் ஊக்குவித்ததற்காகவும் வழங்கப்படுகிறது.
- சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகமானது இந்தியக் குடியரசுத் தலைவரின் சார்பாக பாராட்டு கடிதத்தையும் பதக்கத்தையும் அவருக்கு வழங்கியது.
பிரவாசி பாரதிய சம்மான் விருது
- பிரவாசி பாரதிய சம்மான் விருதானது இந்தியக் குடியரசுத் தலைவரால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாகும்.
- இது 2003 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
- இது இந்தியாவிற்கு கௌரவத்தையும் புகழையும் கொண்டு வருவதில் அவர்களின் முக்கியப் பங்கினை அங்கீகரிக்கின்றது.