TNPSC Thervupettagam

பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அறிக்கை

June 13 , 2023 402 days 242 0
  • உலகின் முன்னணியான மற்றும் ஒரு தன்னிச்சையான நிறுவனங்கள் மதிப்பீட்டு நிறுவனமான பிராண்ட் ஃபைனான்ஸ் தனது அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
  • இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற பட்டத்தினை டாடா குழுமம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உலகின் முன்னணி 500 நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெறும் வகையிலான ஓர் இந்திய நிறுவனம் என்பது, 25 பில்லியன் டாலர் என்ற நிறுவன மதிப்பீட்டினைத் தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இந்தியாவின் இரண்டாவது அதிக மதிப்பு மிக்க நிறுவனமாகும்.
  • 374 மில்லியன் டாலர் நிறுவன மதிப்பு கொண்ட தாஜ் குழுமம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் வலுவான நிறுவனமாக மாறியுள்ளது.
  • இந்தியாவின் ஏழாவது மதிப்புமிக்க நிறுவனமாக மஹிந்திரா குழுமம் நன்கு முன்னேறி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்