பிரான்சின் உயரிய குடிமகன்களுக்கான விருதான “நைட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்” என்ற விருது ஜவஹர்லால் சரீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது இந்தியாவிற்கான பிரெஞ்சுத் தூதரான அலெக்ஸாந்தர் செக்லர் என்பவரால் வழங்கப்பட்டது.
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையேயான கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்தியதிலும் பிரஞ்சு மொழியை ஊக்குவித்ததிலும் முக்கியப் பங்காற்றியதற்காக இவர் இவ்விருதைப் பெற்றுள்ளார்.
இவர் தற்பொழுது அலையன்ஸ் பிரான்காய்ஸ் என்ற அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார்.