TNPSC Thervupettagam
March 10 , 2018 2354 days 726 0
  • பிர்மிங்ஹாமில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ஹாரி அத்வால் நடப்பாண்டின் “மிகச்சிறந்த துணிச்சல்மிகு செயலுக்கான பிர்மிங்ஹாம் புகழ்“ விருதுக்கு (Pride of Birmingham’s Outstanding Bravery Award) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதலில் மிகவும் மோசமாக காயமுற்ற சிறுவனுக்கு உதவுவதற்கு தம் இன்னுயிரையும் பணயம் வைத்தமைக்காக ஹாரி அத்வாலுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில்  விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நபர்களுள் ஹாரியும் ஒருவராவர்.
  • பிர்மிங்ஹாம் மெயில் பத்திரிக்கை (Birmingham Mail newspaper) மற்றும் TSB நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த வருடாந்திர விருது மக்களின் துணிகர வீரச்செயல், இரக்கம், பரிவு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்