TNPSC Thervupettagam

பீகார் முதல்வர்

August 12 , 2022 709 days 355 0
  • பீகார் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் பாகு சௌகானிடம் சமர்ப்பித்தார்.
  • புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையைக் கோருவதற்காக 160 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனது ஆதரவினை வழங்குவதற்கான ஆதரவுக் கடிதத்தையும் அவர் சமர்ப்பித்தார்.
  • பீகார் மாநில முதல்வராக ஜனதா தள் (ஐக்கியம்) தலைவர் நிதிஷ்குமார் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று மீண்டும் பதவியேற்றார்.
  • 2000 ஆம் ஆண்டில் முதல்முறையாக அவர் மாநில முதல்வராகப் பதவியேற்ற பிறகு, திரும்ப அவர் பதவியேற்பது இது எட்டாவது முறையாகும்.
  • துணை முதல்வராக இராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்