தமிழ் எழுத்தாளரான எஸ். வைத்தியலிங்கம் என்ற பிரபஞ்சன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ்மொழியில் பிரபஞ்சனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பானது 1961 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இவரது முதலாவது சிறுகதையான “என்ன உலகமடா” என்பது தமிழ்ப் பத்திரிக்கையான “பரணி”யில் 1961 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது.
இவர் “வானம் வசப்படும்” என்ற தான் எழுதிய நாவலுக்காக 1995 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.
இவர் 1993 ஆம் ஆண்டில் தமிழ்ப் பத்திரிக்கையான தினமணி கதிரில் “வானம் வசப்படும்” என்ற தொடரை எழுதினார்.
மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க, பதவி மற்றும் ஈரோடு தமிழர் உயிரோடு போன்றவை இவருடைய சில புகழ்பெற்ற நாவல்களாகும்.