புதர்த் தவளைகளின் 5 புதிய இனங்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையானது உலகளவில் பல்லுயிர்ப் பெருக்க முக்கியத் தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தவளைகள் பண்டைய உலக மரத் தவளைக் குடும்பமான ரக்சோபோரிடே (Rhacophoridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.
இவை தில்லி பல்கலைக்கழகம், கேரள வன ஆராய்ச்சி மையம் மற்றும் மின்னசொட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சியானது ஏறத்தாழ கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் (ராஆர்ச்செஸ்டிஸ்) புதர்த் தவளை என்பது குறித்த மிக விரிவான ஆய்வின் ஒரு பகுதியாகும்.
இந்தத் தகவல்கள் பியர்ஜெ என்பதில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் புதிய 5 இனங்கள் பின்வருமாறு
ராவ்ஆர்ச்செஸ்டிஸ் டுரூட்டாகு
ராவ்ஆர்ச்செஸ்டிஸ் காக்காயாமென்சிஸ்
ராவ்ஆர்ச்செஸ்டிஸ் கெய்ராசபினே
ராவ்ஆர்ச்செஸ்டிஸ் சஞ்சாபாய்
ராவ்ஆர்ச்செஸ்டிஸ் வெள்ளிக்கண்ணன்
இந்தப் புதிய 5 இனங்களும் கேரளா மாநிலம் தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப் படுகின்றன.