TNPSC Thervupettagam

புதிய MSME வகைப்பாடு 2025

February 5 , 2025 18 days 107 0
  • தற்போது அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் (MSME) வகைப்பாட்டிற்கான முதலீடு மற்றும் வருவாய் வரம்புகள் முறையே 2.5 மற்றும் இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும்.
  • குறு நிறுவனமாக வகைப்படுத்தப்படுவதற்கான முதலீட்டு வரம்பு 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
  • சிறு நிறுவனங்களுக்கான இந்த வரம்பு ஆனது 25 கோடி ரூபாயாகவும், நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு 125 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
  • இதே போல் இந்த வகைப்பாடுகளுக்கான வருவாய் வரம்பு குறு நிறுவனங்களுக்கு 10 கோடி ரூபாயாகவும், சிறு நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாயாகவும், நடுத்தர நிறுவனங்களுக்கு 500 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
  • தற்போது, 7.5 கோடி பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திய, நாட்டின் உற்பத்தியில் 36 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள ​​ஒரு கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்