TNPSC Thervupettagam

புதிய கடல் ரோந்து கப்பல்கள்

March 1 , 2020 1603 days 682 0
  • இந்த திட்டம் மத்திய அரசாங்கத்தின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற  முயற்சியின் கீழ் வருகிறது.
  • இக்கப்பல் தளமானது இந்தியக் கடலோரக் காவல்படைக்கு அனுப்பப்படும்  ஆறு கடல் சார் ரோந்து கப்பல்களை இதுவரை வழங்கியுள்ளது.
  • அவை முறையே ஐ.சி.ஜி.எஸ் விக்ரம், ஐ.சி.ஜி.எஸ் விஜயா, ஐ.சி.ஜி.எஸ் வீரா, ஐ.சி.ஜி.எஸ் வராஹா, ஐ.சி.ஜி.எஸ் வரத் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் வஜ்ரா (37) ஆகும்.

வரத்

  • எல் & டி நிறுவனத்தால்  கட்டப்பட்ட கடல் சார் ரோந்து கப்பல் ஐ.சி.ஜி.எஸ். வரத், பிப்ரவரி 28, 2020 அன்று இந்தியக் கடலோர காவல் படையுடன் (ஐ.சி.ஜி) இணைக்கப் பட்டது.
  • இதை மத்தியக் கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவி, சென்னை அருகே உள்ள எல் & டி காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் துவக்கி வைத்தார்.
  • ஐ.சி.ஜி.எஸ் வரத் கப்பலானது ஒரே முயற்சியில் அனைத்துக் கடல் ஏற்பு சோதனைகளிலும் தேர்ச்சிப் பெற்ற முதற் கடற்படைக் கப்பலாக, கப்பல்  கட்டுமானத் துறையில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • இக்கப்பலின் தொடர்ந்து செயல்படும் திறன் (Endurance) 5,000 கடல் மைல்களாகும் மற்றும் இதன் அதிகபட்ச வேகம் 26 நாட்ஸ் (Knots) ஆகும்.

யார்டு 45006 வஜ்ரா

  • பிப்ரவரி 27, 2020 அன்று ஆறாவது கடல் ரோந்து கப்பல் (ஒ.பி.வி ) “யார்டு 45006 வஜ்ரா” மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.
  • இது கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது பகல் மற்றும் இரவு ரோந்துக்குப் பயன்படுத்தப்படும்.
  • ஒ.பி.வி 7 தொடரில் இது ஆறாவது கப்பலாகும். இது லார்சன் & டூப்ரோவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் குறிக்கோள்கள்,
    • 7500 கி.மீ. பரந்த கடற்கரையையும், 20 லட்சம் சதுர கி.மீ.க்கு மேலான பிரத்தியேக பொருளாதார மண்டலத்தையும் (Exclusive Economic Zone) பாதுகாக்க இந்தியக் கடலோரக் காவல்படையின் முயற்சிகளை வலுப்படுத்துவதும் மற்றும்,
    • உலகளாவிய வர்த்தகத்திற்காக வருடம் முழுவதும் இந்தியக் கடல்  மார்க்கமாகச் செல்லும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்