இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் 68% விலங்கினங்களைக் கண்டுபிடித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து கண்டறியப்பட்ட குரோசிடுரா நார்கொண்டமிகா என்ற ஒரு வெள்ளை-பல் மூஞ்சூறு, புதிதாக அடையாளம் காணப் பட்ட ஒரு பாலூட்டி இனமாகும்.
விட்டேக்கரின் பூனைப் பாம்பு என்றும் அழைக்கப்படும் பொய்கா விட்டகேரி, 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க ஊர்வன இனமாகும்.
இது தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டது.
ஹைமனோப்டெரா எனப்படும் பூச்சிகளின் பட்டியல் மிகவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக இருந்தது.
இது ஒரு புதிய இனம் உட்பட 80 இனங்களை உள்ளடக்கியது.
ஹைமனோப்டெரா குழுவில் மரபூச்சிகள், குளவிகள், தேனீக்கள் மற்றும் எறும்புகள் அடங்கும்.
இந்திய தாவரவியல் ஆய்வின்படி, மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகள் போன்ற பகுதிகளில் 28% இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாநில வாரியான பகுப்பாய்வில், கேரளாவில் 51 குழுமங்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.