தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக என்று நியமிக்கப் பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான அதன் புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமை தேர்தல் ஆணையர் இவரேயாவார்.
விவேக் ஜோஷி என்பவர் தேர்தல் ஆணையராக பதவி ஏற்றார்.
2023 ஆம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டம் ஆனது, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
பிரதமர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவின் ஒரு கூட்டத்தின் பரிந்துரையை அடுத்து அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்வுக் குழுவில் இந்தியப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உள்ளனர்.
ஒரு தலைமை தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர் ஆறு ஆண்டுகள் வரை அல்லது 65 வயது வரை பணியாற்றலாம்.