TNPSC Thervupettagam

புதிய மின்னணு வர்த்தகக் கொள்கை

February 7 , 2019 1990 days 583 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01-ம் தேதி முதல் இந்தியாவின் புதிய மின்னணு வர்த்தகக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஒரு புதிய வகை கொள்கை விதிமுறைகள் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
  • தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது அந்நிறுவனங்களுக்கு அரசின் மாற்றியமைக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு (foreign direct investment) விதிமுறைகளோடு தங்களைப் பொருத்திக் கொள்ளும் வகையில் 60 நாட்கள் அவகாச காலத்தை வழங்கியிருக்கின்றது.
புதிய கொள்கையின் சிறப்பம்சங்கள்
  • நேரடி ஆன்லைன் சில்லறை வர்த்தகர்கள் அவர்கள் பங்கு வைத்திருக்கும் விற்பனையாளர்கள் வழியாக பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை.
  • மேலும் தங்களது விற்பனை நடைமுறைகளில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்வதற்காக அந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களுடன் ஆன்லைன் விற்பனையாளர்கள் சிறப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் தடை.
  • அனைத்து ஆன்லைன் சில்லறை வர்த்தகர்களும் தங்களது இணையதளத்தில் அனைத்து விற்பனையாளர்களையும் அவர்களது பொருட்களையும் விற்பதற்கு வழிவகை செய்யும் வகையில் ஒரு சரிசமமான நடைமுறையை நிர்வகிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவர்.
  • இது இணையதள வர்த்தக வியாபாரிகள் விற்பனையாளர்களின் சரக்குக் கையிருப்பை கட்டுப்படுத்துவதைத் தடை செய்கின்றது.
  • இது மிக அதிகமான தள்ளுபடிகளைத் தடுக்கும் நோக்கில் சந்தைகள் பொருட்களின் விலைகள் மீது தாக்கம் ஏற்படுத்துவதைத் தடுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்