பிரதமர் அவர்கள், 11 மாநிலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் இரயில்களை செப்டம்பர் 24 ஆம் தேதியன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் ஆகியவற்றுக்கு இடையேயான வந்தே பாரத் இரயில் சேவையும் அவர் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூரில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்நாடு மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது வந்தே பாரத் சேவை இதுவாகும்.
இந்த ஒன்பது இரயில்களுடன் நாட்டில் இயக்கப்படும் மொத்த வந்தே பாரத் இரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இவை ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்தும்.