TNPSC Thervupettagam

புதைபடிவ மரத்தில் வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்கள்

June 1 , 2024 47 days 176 0
  • சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், பாந்தவ்கர் தேசிய பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தில் இருந்து புதைபடிவமான மரத்தால் செய்யப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கலைப் பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • பண்டைய காலத்தினைச் சேர்ந்த வேட்டையாடி உணவு உண்ட மக்கள் தங்கள் கருவிகள் மற்றும் கலைப்பொருட்களை உருவாக்க வேண்டி புதைபடிவமான மரத்தின் தண்டுகளை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தினர் என்று இந்தக் கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.
  • அவை குறைந்தது சுமார் 10,000 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது மத்தியப் பிரதேசத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் அமைந்துள்ள குக்வா தேசிய புதை படிவப் பூங்கா 1983 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக நிறுவப்பட்டது.
  • புதைபடிவமான மரத்தால் செய்யப்பட்ட கருவிகள் இந்தியாவில் அரிதானவை என்ற நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் என சில இடங்களில் மட்டுமே இவை காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்