TNPSC Thervupettagam

புத்தொழில் நிறுவனங்களின் சூழலமைவு

January 22 , 2024 179 days 255 0
  • வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான புத்தொழில் நிறுவனங்களின் சூழலமைவுகளை உருவாக்குவதில் குஜராத், கேரளா மற்றும் கர்நாடகா சிறந்த செயல் திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
  • தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் சிறந்த செயல்திறன் கொண்டவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் புத்தொழில் நிறுவனங்கள் தரவரிசை ஆனது தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையினால் (DPIIT) தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் தரவரிசையில் மொத்தம் 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் பங்கேற்றன.
  • DPIIT அவற்றைச் சிறந்த செயல்திறன் கொண்டவைகள், முன்னணி செயல்திறன் கொண்டவைகள், முதன்மையானவை, ஈடுபாடுமிக்கவை மற்றும் வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவன சூழல் அமைப்புகள் என ஐந்து பிரிவுகளின் கீழ் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • வளர்ந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக வேண்டி புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் அவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்