முன்மொழியப் பட்ட புனே - மும்பை ஹைப்பர்லூப் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ரத்து செய்ய இருக்கின்றது.
இது ஒரு அதி நவீனப் போக்குவரத்து அமைப்பாகும். இது இந்த இரு நகரங்களுக்கிடையிலானப் பயண நேரத்தை 2.5 - 3 மணி நேரத்திலிருந்து 25 நிமிடங்களாகக் குறைக்கும்.
இந்தத் திட்டமானது “உலகில் எங்கும் செயல்படுத்தப் படவில்லை” என்றும் இன்னும் சோதனை நிலையிலேயே இருந்ததாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது ஒரு போக்குவரத்து அமைப்பாகும். இதில் விமானத்திற்கு இணையான வேகத்தில் ஒரு போட் போன்ற வாகனமானது நகரங்களை இணைக்கும் வெற்றிடக் குழாய் வழியாகச் செலுத்தப் படுகின்றது.
ஹைப்பர்லூப் என்ற கருத்தாக்கமானது டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்கின் ஒரு சிந்தனை முயற்சியாகும்.