கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் மற்றும் பிரிட்டிஷ் எழுத்தாளரான பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் புக்கர் பரிசின் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த இலக்கிய விருதின் 50,000 பவுண்டு மதிப்பிலான நிதித் தொகையைச் சமமாகப் பிரித்துக் கொள்ள இருக்கின்றனர்.
புக்கர் விதிகள் இந்தப் பரிசைப் பிரிக்கக் கூடாது என்று கூறுகின்றன. ஆனால் இந்தப் பரிசின் நடுவர்கள் இந்த இரண்டு படைப்புகளையும் "பிரிக்க முடியாது" என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது 1969 ஆம் ஆண்டு முதல் மேன் குழுமத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
பெர்னார்டின் எவரிஸ்டோ
புத்தகம்: சிறுமி, பெண், மற்றவை (Girl, Woman, Other).
புக்கர் பரிசை வென்ற ஒரே கருப்பினப் பெண்மணி எவரிஸ்டோ ஆவார். இவருடைய வயது 60 ஆகும்.
இவரது புத்தகமானது நவீன கால ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் கறுப்பினப் பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின் பல்வேறு போராட்டங்களையும் ஆராய்கின்றது.
மார்கரெட் அட்வுட்
புத்தகம்: நற்செய்தி (The Testament).
79 வயதான அட்வுட் என்பவர் தனது வாழ்க்கையின் இரண்டாவது புக்கர் பரிசினை வென்றுள்ளார்.
“தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்” (1985) என்ற படைப்பிற்காக இவர் ஏற்கெனவே புக்கர் விருதினைப் பெற்றுள்ளார்.