TNPSC Thervupettagam

புற்றுநோய் செல்களை ஒரே நேரத்தில் கண்டறிந்து அழிக்கும் கார்பன் நானோ பொருட்கள்

November 14 , 2018 2075 days 612 0
  • IIT-ரூர்க்கியின் அறிவியலாளர்கள் புற்றுநோய் செல்களை ஒரே நேரத்தில் கண்டறியவும் அழிக்கவும் கூடிய ஒளிரும் கார்பன் பொருளை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த நானோ அளவிலான (10-9 மீட்டர்) கார்பன் பொருட்கள் புற்றுநோய் செல்களை கண்டறியும் தன்மை மற்றும் சிகிச்சையளிக்கும் தன்மை ஆகியவற்றுக்கான முகவர்களாக செயல்படும்.
  • இவை ரோஸ் பெரிவிங்கிள் தாவர இலையிலிருந்து பிரித்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆய்வானது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB - Science and Engineering Research Board) மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் (DBT - Department of Biotechnology) ஆதரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்