2021 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசு சமீபத்தில் வழங்கப்பட்டது.
இவ்விருது செய்தித் தாள்கள், பத்திரிகை, இணையதள பத்திரிகை, இலக்கியம் மற்றும் இசைத் தொகுப்பு ஆகிய துறைகளில் அமெரிக்க நாட்டிற்கு உள்ளாகவே நிகழ்த்தப் பட்ட சாதனைகளுக்காக வழங்கப் படும் ஒன்றாகும்.
இது 1917 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டு கொலம்பியா பலகலைக் கழகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான மேகா ராஜகோபாலன் என்பவர் அமெரிக்காவின் இந்த உயரியப் பத்திரிக்கையாளர் விருதினை வென்று உள்ளார்.
இவ்விருதினை வென்ற மற்ற இரு முக்கியப் பத்திரிக்கையாளர்கள் டாம்பே பே டைம்ஸ் இதழின் நீல் பேடி மற்றும் காத்லீன் மெக்கோரி ஆகியோராவர்.