உலகின் தலைசிறந்தப் புள்ளியியல் நிபுணர் கலியம்புடி ராதாகிருஷ்ணன் ராவ் (102) காலமானார்.
கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் (ISI) ஆசிரியராகப் பணி புரிந்த அவர் ஆராய்ச்சி பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்தியாவில் தேசியப் புள்ளியியல் அமைப்புகள், புள்ளியியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக இந்திய அரசினால் அமைக்கப்பட்ட குழுக்களில் ஒரு உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார்.
மேலும் அவர்,
புள்ளியியல் குழுவின் தலைவராகவும் (1962-69),
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான மக்கள்தொகை மற்றும் தகவல் தொடர்பு தொடர்புத் தலைவராகவும் (1968-69),
கணிதம் மற்றும் அணுசக்தி ஆணையம் (AEC) ஆகியவற்றிற்கான குழுக்களின் தலைவராகவும் (1969-78),
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் (COST) ஒரு உறுப்பினராகவும் (1969-71) பணியாற்றியுள்ளார்.
1969 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் முறையே அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.