TNPSC Thervupettagam

புள்ளியியல் துறை

May 27 , 2019 1881 days 1020 0
  • தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் மே 23-ம் தேதியிட்ட ஒரு ஆணையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சத்தின் கீழ் மத்திய புள்ளியியல் நிறுவனத்துடன் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தை இணைப்பதாக அறிவித்து இருக்கின்றது.
  • ஒரு புதிய தேசிய புள்ளியியல் நிறுவனம் அமைக்கப்படுவதற்காக தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமும் மத்திய புள்ளியியல் நிறுவனமும் இணைக்கப்படும்.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய நிறுவனம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் செயலாளரால் தலைமை தாங்கப்படும்.
  • மத்திய புள்ளியியல் நிறுவனம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழிலக உற்பத்திக் குறியீடு போன்ற பொருளாதாரக் குறியீடுகள் மீதான தரவுகளை அளிக்கின்றது.
  • தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் நுகர்வோர் செலவு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற விவகாரங்கள் மீது ஆய்வு நடத்துகின்றது.
  • தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தால் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பின்மை மீதான சமீபத்திய தரவுகளானது மோடி அரசால் பொது வெளியில் இன்னும் வைக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்