ஒரே மாதிரியான நெல் கொள்முதல் கொள்கையை பின்பற்றக் கோரி தெலுங்கானா மாநில முதல்வர் K. சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் புது தில்லியின் தெலுங்கானா இல்லத்தில் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் அதிகளவில் உற்பத்தி செய்யும் புழுங்கல் அரிசியை உபரி அளவில் கொள் முதல் செய்வதை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து இந்தப் போராட்டமானது நிகழ்த்தப்பட்டது.
புழுங்கல் அரிசிக்கான தேவை குறைவாக இருப்பதால், அதனை அதிகளவில் கொள் முதல் செய்து பணத்தை வீணடிக்க இயலாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புழுங்கல் அரிசி என்பது ஆலையில் பிரித்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, நெல்லாக இருக்கும் போதே வேக வைக்கப் பட்ட அரிசியைக் குறிக்கிறது.