மேகாலயாவின் மௌசின்ராம் பகுதியில், 1966 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக மழைப்பொழிவு பதிவாகி ஒரு புதிய சாதனை அளவை எட்டியுள்ளது .
புவியில் அதிக ஈரப்பதம் உள்ள இடமாகத் திகழும் சிரபுஞ்சியின் சாதனையை இது முறியடித்தது.
மௌசின்ராம் பகுதியில் 24 மணி நேரத்தில் 1003 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.
புவியின் மிக ஈரமான இடங்களில் ஒன்றாகத் திகழும் சிரபுஞ்சியில் பதிவான மழைப் பொழிவானது, 1995 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாகவும், 122 ஆண்டுகளாக மூன்றாவது அதிகபட்ச ஈரப்பதம் உள்ள இடமாகவும் இருந்தது.
சிரபுஞ்சியானது மௌசின்ராமிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.