வெளிநாட்டு ரஷ்யப் படிப்பிற்கு அவருடைய பங்களிப்பிற்காக மதிப்புமிக்க 2019 ஆம் ஆண்டின் ‘புஷ்கின் விருதானது’ ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மீட்டா நரேன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் பட்டதாரி மாணவர்களுக்கான ரஷ்ய ஆய்வுப் பாடப் புத்தகங்களை மீண்டும் எழுதுவதற்கு நரேன் பங்களித்துள்ளார்.
அவரால் ஈர்க்கப்பட்ட புத்தகங்கள் பல முன்னாள் சோவியத் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.
இதுபற்றி
ரஷ்ய மொழி மற்றும் ரஷ்யக் கலாச்சாரத்தை மேம்படுத்தியதற்காக ரஷ்ய அரசால் இந்திய அறிஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது புஷ்கின் விருதாகும்.
இது 1999 இல் நிறுவப்பட்டது. பிரபல ரஷ்ய எழுத்தாளரும் கவிஞருமான அலெக்சாண்டர் எஸ். புஷ்கின் என்பவரின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டது.