மத்தியப் பிரதேச மாநிலம் பட்டியலிடப்பட்டப் பகுதிகளுக்குப் பஞ்சாயத்து முறை நீட்டிப்பு (PESA) சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
கிராம சபைகளின் தீவிர ஈடுபாட்டுடன் பழங்குடியின மக்களைச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
PESA சட்டம் கிராமப் பஞ்சாயத்துகள் சிறு வன உற்பத்திகள், நிலம் மற்றும் சிறு நீர்நிலைகள் மற்றும் அரசாங்க திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான விவகாரங்களை முடிவு செய்ய அனுமதிக்கும்.
இந்தப்பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவுகளையும் இது பராமரிக்கும்.