TNPSC Thervupettagam

பெண் தொழில்முனைவுத்தன்மை இணைய வாயில்

March 17 , 2018 2316 days 735 0
  • சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று நிதி ஆயோக் அமைப்பானது பெண் தொழில்முனைவோர் இணையவாயிலை  (Women Entrepreneurship Platform - WEP) தொடங்கியுள்ளது.
  • புகழ்பெற்ற பாடகரான கைலாஷ் கெர் என்பவரால் இசையமைத்து பாடப்பட்ட ‘நாரி சக்தி’ எனும் பெண் தொழிற்முனைவோர் இணையவாயிலுக்கான கருப்பொருள் பாடல் (Theme song) ஒன்றும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
  • மூன்று தூண்களின் மேல் இந்த இணையவாயில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அவையாவன,
    • இக்ஹா சக்தி (Ichha Shakti) - தங்களுடைய சுய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல்
    • கியான் சக்தி (Gyaan Shakti) - தொழில்முனைவுத் தன்மையை வளர்த்துக் கொள்ள  பெண் தொழில்முனைவோர்களுக்கு  தொழில்முனைவு தொடர்பான அறிவு மற்றும் சூழலியல் ஆதரவுகளை வழங்குதல்.
    • கர்ம சக்தி (Karma Shakti) - வணிக தொழில்களை தொடங்குவதிலும், அவற்றை பெருக்குவதிலும் பெண் தொழிற் முனைவோர்களுக்கு ஆதரவு அளித்தல்.
  • மதிப்பீட்டு நிறுவனமான CRISIL நிறுவனம் மூலம் பெண்கள் நடத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களினுடைய கடன்களை மதிப்பீடு (Credit Evaluation) செய்தல் போன்ற பல்வேறு தனித்துவ சேவைகளை பெண் தொழிற்முனைவோர்களுக்கு  இந்த பெண் தொழில்முனைவுத்தன்மை  இணையவாயில் வழங்கவல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்