TNPSC Thervupettagam

பெரம்பலூரில் புதைபடிவங்கள்

November 3 , 2020 1356 days 677 0
  • குன்னத்தில் (பெரம்பலூர்) 25க்கும் மேற்பட்ட கூட்டுப் பொருட்கள் (அம்மோனியம் படிவுகள்) காணப்பட்டன.
  • உத்தத்தூர் உருளைக்கிழங்கு என்று அழைக்கப் படும் வட்ட வடிவ பாஸ்பேடிக் திரள்களும் குன்னம் மற்றும் காரை பகுதிகளில் கிடைத்தன.
  • இப்பகுதியில் உள்ள ஆனைவரி என்ற நீரோட்டத்தில் ஒரு புதைபடிவ மரம் (fossilised tree) மற்றும் அம்மோனைட் படிவுகள் காணப்பட்டன.
  • அம்மோனைட் (அம்மோனாய்டுகள்) என்பவை ஒரு பெரிய மற்றும் மாறுபட்ட கடல்வாழ் இனமாகும்.
  • இது சுமார் 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெவோனியன் காலத்தில் தோன்றியது.
  • அம்மோனாய்டுகள் மூன்று பேரழிவுகளிலிருந்து தப்பியுள்ளன.
  • அதில், பெர்மியன் அழிவு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • இது சுமார் 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் செயல்பாட்டினால் ஏற்பட்ட ஒரு புவி வெப்பமடைதல் நிகழ்வு ஆகும்.
  • இது பூமியின் கடல் உயிரினங்களில் 96 சதவீதத்தை அழித்தது.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் அரியலூர் பகுதியில் 6.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்ததாக தொல்பொருள் சான்றுகள் தெரிவிக்கின்றன.
  • ஆனால் அதற்கான முட்டைகளின் எச்சங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.
  • தற்போதைய தமிழ்நாட்டில் இருக்கும் முந்தைய காலத்திய அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகள் கடலில் மூழ்கியிருந்தன.
  • சுமார் ஒன்பது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துரோனியன் - செனோமானியன் கிரெட்டேசியஸ் காலத்தில் (Turonian-Cenomanian Cretaceous period) கடலின் ஆழம் சுமார் 100 மீட்டர் என்ற அளவில் இருந்த போது குன்னத்தில் இருக்கும் இந்தப் புதைபடிவங்கள் உருவாகியிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்