கோபர்நிகஸ் கடல்சார் சுற்றுச்சூழல் கண்காணிப்புப் பணி அமைப்பானது 5வது பெருங்கடல் நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகிலுள்ள பெருங்கடல்கள் இயற்கை மாற்றங்கள், அதிகப்படியான சுரண்டல் மற்றும் மானுடவியல் தாக்கங்கள் போன்றவற்றினால் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த மாற்றங்கள் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3.1 மில்லி மீட்டர் வரை கடல் மட்டத்தை உயர்த்தியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆர்க்டிக் கடலில் உள்ள பனிப்படலம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.