TNPSC Thervupettagam

பெருங்கற்கால தொப்பிக் கற்கள்

August 24 , 2023 330 days 206 0
  • கேரளாவில் குட்டிப்புரம் கிராமத்தில் உள்ள நாகபரம்பா என்னுமிடத்தில்  சமீபத்தில் மேற் கொள்ளப் பட்ட தொல்லியல் மீள்வு அகழ்வாராய்ச்சியின் போது ஒரே இடத்தில் இருந்து ஏராளமான பெருங்கற்கால தொப்பிக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • தொப்பிக் கற்கள் என்பன மலையாளத்தில் தொப்பிக்கல்லு என்று வெகு பிரபலமாக அழைக்கப் படுகிறது.
  • அவை பெருங்கற்காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகளுக்கான ஒரு மூடியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு அரைக்கோள வடிவிலான செம்புரைக் (லேட்டரைட்) கற்கள் ஆகும்.
  • இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்தத் தகவல்களை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்