TNPSC Thervupettagam

பொதுத்துறை வங்கிகளின் மிகப்பெரிய ஒருங்கிணைப்பு

March 9 , 2020 1595 days 549 0
  • மத்திய அமைச்சரவை தலைமையில் 10 பொதுத்துறை வங்கிகளின் மிகப்பெரிய ஒருங்கிணைப்புக்கு ஒப்புதல் அளித்தது.
  • இம்மிகப்பெரிய இணைப்பு 2020 ஏப்ரல் 1ஆம் தேதி  முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
  • யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைப்பதும் இதில் அடங்கும்.
  • இது அந்த முன்மொழியப்பட்ட நிறுவனத்தை இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக மாற்றும்.
  • மேலும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படும்.
  • கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திர வங்கியை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன்  இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைக்கவும் அது ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்