மேற்கு வங்காள மாநில சட்டமன்றம் ஆனது, ‘பொய்லா பைசாக்’ என்ற கொண்டாட்டத்தினை ‘பங்களா திபாஸ்’ அல்லது மேற்கு வங்காள நிறுவன தினமாக அறிவித்தது.
இது வங்காள நாட்காட்டியின் முதல் நாள் ஆகும்.
ரவீந்திரநாத் தாகூரின் ‘பங்களார் மாட்டி பங்களா ஜோல்’ (வங்காளத்தின் மண் மற்றும் வங்காளத்தின் நீர்) என்றப் பாடலை மேற்கு வங்காளத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக மாற்றுவதற்கான முன்மொழிவையும் அது நிறைவேற்றியது.
வங்காளம் ஆனது, காலங்காலமாக ஒரு தனி இராச்சியம் அல்லது மாகாணமாக திகழ்ந்தது.
1947 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வங்காளப் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் இது வங்காள தினமாகக் கொண்டாடப்பட்டது.