கேரளாவில் ஒரே திட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்கவும் அறிவு சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவி வழங்கவும் வேண்டி இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மேம்பாட்டு மற்றும் புத்தாக்க உத்தி மன்றமானது இத்திட்டத்திற்குத் தலைமை தாங்குகிறது.
திட்டத்தின் அமலாக்கத்திற்காகவும் நிதிப் பயன்பாட்டு நோக்கங்களுக்காகவும் வேண்டி “அறிவுப் பொருளாதார நிதி” என்ற நிதியானது உருவாக்கப்படும்.