2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆனது ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியை கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
"பெண்களின் தொழிலாளர் சந்தை முடிவுகள் மற்றும் ஊதிய இடைவெளிகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக" இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 200 ஆண்டுகளில் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அவரது ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுமார் 20 சதவீத பெண்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனர் என்று கோல்டினின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆனால், இதில் திருமணமான பெண்களின் பங்கு ஐந்து சதவீதம் மட்டுமே ஆகும்.
"திருமணம் சார்ந்த தடைகள்" எனப்படும் விதி பெரும்பாலும் திருமணமான பெண்கள் ஆசிரியர்களாக அல்லது அலுவலக ஊழியர்களாக வேலை செய்வதைத் தடுக்கிறது என்று கோல்டின் குறிப்பிட்டார்.
கோல்டினின் ஆராய்ச்சியானது பெண் தொழிலாளர் வளம், வருவாயில் உள்ள பாலினம் சார்ந்த இடைவெளி, வருமான சமத்துவமின்மை, தொழில்நுட்ப மாற்றம், கல்வி மற்றும் புலம் பெயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது.
2009 ஆம் ஆண்டில் எலினோர் ஆஸ்ட்ரோம் மற்றும் 2019 ஆம் ஆண்டில் எஸ்தர் டஃப்லோ ஆகிய இரண்டு பெண்களைத் தொடர்ந்து பொருளாதார அறிவியலுக்கான பரிசு மூன்றாவதாக கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆனது 1895 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆல்ஃபிரட் நோபல் பரிசின் ஒரு பகுதி அல்ல.
பொருளாதார அறிவியல் விருது ஆனது சுவீடனின் மத்திய வங்கியால் 1968 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டது.