TNPSC Thervupettagam

பொருளாதாரப் பரிமாற்றத் திட்டம்

March 5 , 2024 137 days 198 0
  • மும்பை, சூரத், வாரணாசி மற்றும் விசாகப்பட்டினத்தின் பொருளாதாரப்  பரிமாற்றத்திற்கான திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பு தயாரித்துள்ளது.
  • இந்திய நாட்டினை வளர்ச்சிப் பெற்ற பொருளாதாரமாக மாற்றுதல் என்ற ஒரு பரந்த குறிக்கோளுடன் சேர்த்து, இந்த நகரங்களில் பல பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் 20 முதல் 25 நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இருப்பதால், பொருளாதாரத் திட்டமிடல் அறிக்கையினைத் தயாரிக்கவும் நிதி ஆயோக் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், விக்சித் பாரத் @2047 (2047 ஆம் ஆண்டில் மேம்பட்ட இந்தியாவினை உருவாக்குதல்) என்ற ஒரு இலக்கிற்காக 10 துறை சார்ந்த கருப்பொருள் சார்ந்த குறிக்கோள்களை ஒருங்கிணைக்கும் பணி நிதி ஆயோக் அமைப்பிடம் வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்