TNPSC Thervupettagam

பொலிவுறு நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகளின் உச்சி மாநாடு

May 11 , 2018 2264 days 655 0
  • மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரத்தில் பொலிவுறு நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகளின் முதல் உச்சி மாநாடு நடத்தப்பட்டது.
  • இது மத்திய நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. மேலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சரால் (தனிப் பொறுப்பு) துவக்கி வைக்கப்பட்டது.
  • இந்த 2 நாள் மாநாடு பொலிவுறு நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு மாற்றுத் துறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான நடைமுறையை உருவாக்கிடவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் நடத்தப்பட்டது.
  • 2015-ஆம் ஆண்டு, ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பொலிவுறு நகரங்கள் திட்டம் மிகுந்த நிலைமாற்றத்தை கொண்டுவரும் நகர்ப்புறத் திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்