பொலிவுறு நகரங்கள் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அமல்படுத்தும் செயல்முறையில் ஜார்க்கண்ட் மாநிலமானது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தர வரிசையின் படி இது கூறப் பட்டுள்ளது.
அதே சமயம் நூறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் முன்னேற்ற நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி 12வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.