சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம், 1967ன் கீழ் அசாமைத் தலைமை இடமாகக் கொண்டுச் செயல்படும் கிளர்ச்சிக் குழுவான NDFB (National Democratic Front of Bodoland - போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணி) மீதான தடையை மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணியானது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் இந்திய எதிர்ப்பு சக்திகளுடன் கைகோர்த்ததற்காகவும் தடை செய்யப் பட்டுள்ளது.
போடோஸ் என்பது அசாமில் உள்ள ஒரு மிகப்பெரிய பழங்குடியினச் சமூகமாகும் (அம்மாநில மக்கள் தொகையில் 5-6%).
ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த, பிரிவினைவாத கோரிக்கைகளின் நீண்ட வரலாற்றை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.