குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் மாதாங்கினி ஹஸ்ரா, கனகலதா பருவா ஆகியோர் நம் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் அழிக்க முடியாதப் பங்களிப்பினை ஆற்றிய சில குறிப்பிடத் தக்க வீராங்கனைகளை நினைவு கூர்ந்தார்.
1930 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் காந்தியின் தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக யாத்திரையில் பங்கேற்றதற்காக ஹஸ்ரா கைது செய்யப்பட்டார்.
ஹஸ்ரா, 1942 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள தம்லுக் எனுமிடத்தில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் சமயம் ஓர் அணிவகுப்பை வழி நடத்திய போது, ஆங்கிலேய வீரர்களின் தோட்டாக்களுக்குப் பலியான போது அவருக்கு வயது 73 ஆகும்.
1977 ஆம் ஆண்டில், கொல்கத்தா நகர மைதானத்தில் ஒரு பெண் புரட்சியாளருக்காக ஏற்படுத்தப் பட்ட முதல் சிலை மாதாங்கினி ஹஸ்ராவின் சிலையாகும்.
கனகலதா பருவா, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற இளம் தியாகிகளில் ஒருவர் ஆவார்.
1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று, கோஹ்பூர் காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காக வேண்டி மேற்கொள்ளப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் மிருத்யு பாஹினி அணி வகுப்பை 17 வயதான பருவா தலைமையேற்று வழி நடத்திச் சென்றார்.
2020 ஆம் ஆண்டில், விரைவு ரோந்துக் கப்பல் (FPV) எனப் படும் கடலோரக் காவல் படைக்கு இவரின் நினைவாக ICGS கனகலதா பருவா என்று பெயரிட்டது.