கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பல பயன்பாடு கொண்ட போலாவரம் நீர்ப்பாசனத் திட்டக் கட்டமைப்புப் பணிகளுக்கான அனுமதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆகியவற்றில் பாயும் கோதாவரி நதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதன் நீர்த்தேக்கங்கள் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் பகுதிகளிலும் பரவியுள்ளன.
இது 2014 ஆம் ஆண்டில் தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.
இது 3 இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கும் என்றும் நிறுவப்பட்ட 960 மெகா வாட் திறன் கொண்ட நீர் மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் என்றும் 25 இலட்சம் மக்களுக்கு குடிநீர் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.