TNPSC Thervupettagam

போலி செய்திகளைத் தடுக்க புதிய சட்டம்

August 21 , 2018 2192 days 615 0
  • போலியான செய்திகளை வெளியிடும் சமூக வலைதள கணக்குகளை முடக்கவும், பத்திரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து எகிப்து நாட்டு பாராளுமன்றம் சட்டமியற்றியுள்ளது.
  • அதிபர் அப்தல் ஃபட்டா அல்-ஸிஸி ஆல் நியமிக்கப்பட்ட அதிகாரியை தலைவராகக் கொண்ட, ஊடகங்களை நிர்வகிக்கும் உயர்மன்றமானது இச்சட்டத்தை மேற்பார்வையிட்டு விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.
  • இம்மசோதா உயர்மன்றத்திடமிருந்து உரிமம் பெறாமல் வலைதளங்கள் தொடங்குவதை தடை செய்கிறது. மேலும் எந்தவொரு வலைதளங்களையும் தற்காலிக தடை அல்லது முடக்கம் செய்ய  அனுமதியளிக்கிறது.
  • சமீபத்தில் பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2017ல் 180 நாடுகளில் எகிப்து 161வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்