TNPSC Thervupettagam

ப்ராஸ்பெரிட்டி கார்டியன் நடவடிக்கை

December 25 , 2023 207 days 222 0
  • செங்கடலில் பாதுகாப்பு நிலையைப் பேணுவதற்காக வேண்டி அமெரிக்க அரசானது, ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
  • ஐக்கியப் பேரரசு, பஹ்ரைன், கனடா, பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, செஷெல்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பன்னாட்டுப் பாதுகாப்பு முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
  • செங்கடல் ஆனது, சர்வதேச வர்த்தகத்தினை மேற்கொள்வதற்கு அவசியமான தடையற்றப் போக்குவரத்து மற்றும் முக்கிய வணிக வழித்தடம் ஆக விளங்கும் ஒரு முக்கிய நீர்வழிப் பாதையாகும்.
  • சமீபத்தில், ஏமன் நாட்டினைச் சேர்ந்த ஹவுதி போராளிகள் வணிக கப்பல்களை 12 முறை தாக்கியுள்ளனர் அல்லது கைப்பற்றியுள்ளனர்.
  • முன்னதாக நவம்பர் மாதத்தில், ஹவுதி போராளிகள், கேலக்ஸி லீடர் என்ற இந்தியக் கப்பலை கடத்திச் சென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்