இது விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத்தின் செயல்பாட்டுச் சுழற்சியின் வெற்றிகரமான உச்ச நிலையைக் குறிப்பதற்காக வேண்டி ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
இதற்காக 16 கோப்பைகளானது பல்வேறு செயல்பாட்டுப் பகுதிகளில் சிறப்புமிகு தன்மையை அங்கீகரிப்பதற்காக வழங்கப் பட்டுள்ளது.
சிறந்த கப்பலுக்கான மிகவும் புகழ்பெற்ற கோப்பையானது இதர சிறந்த தலைமைத்துவமான கப்பல்களிடையே ஐஎன்எஸ் சஹயாத்ரி என்ற கப்பலுக்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும் இந்த விருது பாதுகாப்புக் கப்பல்கள் மற்றும் அதே வகுப்பைச் சேர்ந்த மற்ற இதர கப்பல்களுள் ஐஎன்எஸ் கோரா என்ற கப்பலுக்கும் வழங்கப் பட்டுள்ளது.
இந்தியக் கடற்படைக் கப்பல்களான ஐராவத் மற்றும் கில்டன் ஆகியவை கூட்டாக சவாலான திட்டங்களை மேற்கொண்டதற்காகவும் சிறப்புமிகு உற்சாக உணர்வை வெளிக் காட்டியதற்காகவும் “சிறந்த உற்சாக உணர்வு கொண்ட கப்பல்” என்ற விருதை வென்றுள்ளன.