அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தின் NS-25 விண்வெளிப் பயணத்தில், ஒரு சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை கோபி தோட்டகுரா பெற உள்ளார்.
இந்த விண்வெளிப் பயணத் திட்டத்தில் விண்வெளிக்குப் பயணிக்கும் ஆறு நபர்களில் ஒருவராக தோட்டகுரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது 1984 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் விமானப் படைத்தளபதி ராகேஷ் சர்மாவிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்திய விண்வெளிச் சுற்றுலாப் பயணி மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையினை இவர் பெற உள்ளார்.